மணிப்பூரில் ஆயுதம் ஏந்திய கும்பல் தாக்குதல்: பெண் உள்பட மூவர் பலி!
மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் தாக்குதல் நடைபெற்றது பற்றி..
மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஆயுதம் ஏந்திய கும்பல் நடத்திய தாக்குதலில் பெண் உள்பட மூவர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காங்போக்பி மாவட்டத்தின் சைது-கம்பாசோல் துணைப் பிரிவில் உள்ள லோய்போல் குல்லன் கிராமத்தில் அதிகாலை 4 மணியளவில் நடந்த இந்தத் தாக்குதலில் ஏழு வீடுகள் தீக்கிரையாகின.
எதிரெதிர் குழுக்களுக்கு இடையே பல நிமிடங்கள் நீடித்த துப்பாக்கிச் சூடு மோதலில் பெண் உள்பட மூவர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூட்டிற்குப் பயந்து கிராம மக்கள் பாதுகாப்பைத் தேடி அருகிலுள்ள வனப்பகுதிகளுக்கு ஓடியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
உயிரிழந்தவர்கள் லெட்கோங்கம் ஹாவ்கிப், டின்மேரி ஹாவ்கிப் மற்றும் ஜங்மின்லால் ஹாவ்கிப் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
துணை முதல்வர் நெம்ச்சா கிப்ஜென் இந்தத் தாக்குதலைக் கண்டித்ததுடன், இதற்குப் பொறுப்பானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய சமூக விரோதிகளால் மூன்று அப்பாவிகள் கொல்லப்பட்டதும், வீடுகள் எரிக்கப்பட்டதும் துயரமான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.
பாதிக்கப்பட்ட குடும்பங்கள், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கடவுள் வலிமையைக் கொடுக்கட்டும்.
அரசு இந்தச் சம்பவத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன, மேலும் இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்களின் பாதுகாப்பும் நலனுமே எங்கள் முன்னுரிமை என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மக்கள் அமைதி காக்குமாறும் அவர் தெரிவித்தார். அப்பாவிகள் வேண்டுமென்றே கொல்லப்படுவதும், வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்கள் அழிக்கப்படுவதும் மனித கண்ணியம், அடிப்படை மனித உரிமைகளின் தீவிர மீறலாகும் என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.