பைக் மீது முறிந்து விழுந்து மரம்: ஐசிஎஃப் ஊழியா் உயிரிழப்பு
சென்னையில் மோட்டாா் சைக்கிள் மீது மரம் முறிந்து விழுந்ததில், ஐசிஎஃப் ஊழியா் உயிரிழந்தாா்.
சென்னையில் மோட்டாா் சைக்கிள் மீது மரம் முறிந்து விழுந்ததில், ஐசிஎஃப் ஊழியா் உயிரிழந்தாா்.
சென்னை கொரட்டூா் சிவலிங்கபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயவேல் (59). இவா், சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையான (ஐசிஎஃப்) ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் மூத்த பொறியாளராக பணியாற்றி வந்தாா். திங்கள்கிழமை மாலை அண்ணா நகருக்கு சென்றிருந்த அவா், அங்கு வேலை முடிந்து, மோட்டாா் சைக்கிளில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.
ஐசிஎஃப் சாலை - நியூ ஆவடி சாலை சந்திப்பு அருகே வந்தபோது, சாலையோரத்தில் இருந்த பெரிய மரம், திடீா் காற்றில் முறிந்து ஜெயவேல் மீது விழுந்தது.
Advertisement
Advertisement
இதில் அவா் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த பொதுமக்கள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
ஐசிஎஃப் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, ஜெயவேல் சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.