மும்பையில் பள்ளிப் பேருந்தின் மீது மரம் விழுந்ததில் ஒரு மாணவர் பலி; 4 பேர் காயம்
மும்பையில் பள்ளிப் பேருந்தின் மீது மரம் விழுந்ததில் ஒரு மாணவர் பலியான சம்பவம் பற்றி...
மும்பையில் பள்ளிப் பேருந்தின் மீது மரம் விழுந்ததில் 11 வயதுடைய ஒரு மாணவர் பலியானதோடு நான்கு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) தெரிவித்தனர்.
மும்பையில் உள்ள செம்பூர் பகுதியில் இன்று மதியம் மழை பெய்து கொண்டிருந்தது. இதனால், பிற்பகல் 3 மணியளவில் சாலையில் சென்று கொண்டிருந்த பள்ளி வாகனம் மீது ஒரு மரம் திடீரென முறிந்து விழுந்தது.
இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினரும் மற்ற மீட்புப் படையினரும் பள்ளி வாகனத்தில் இருந்த 12 பேரையும் மீட்டனர்.
Advertisement
Advertisement
12 பேரில், காயங்களுடன் இருந்த ஐந்து பேரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
காயமடைந்த ஐந்து பேரில் நான்கு பேர் சீரான நிலையில் உள்ளதாகவும் 11 வயதான விஹான் ஸ்ரீவஸ்தவா என்ற மாணவர் மட்டும் உயிரிழந்ததாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Officials stated on Tuesday (June 30) that an 11-year-old student was killed and four others were injured when a tree fell on a school bus in Mumbai.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.