ஹரியாணா: பள்ளி கூரையின் மீது சுவர் இடிந்து விழுந்ததில் 10 மாணவர்கள் காயம்
ஹரியாணாவில் பள்ளி கூரையின் மீது சுவர் இடிந்து விழுந்ததில் 10 மாணவர்கள் காயமடைந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியாணாவில் பள்ளி கூரையின் மீது சுவர் இடிந்து விழுந்ததில் 10 மாணவர்கள் காயமடைந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியாணா மாநிலம், ஃபரிதாபாத்தில் தனியார் பள்ளிக்கு அருகில் கட்டப்பட்டு வந்த கட்டடத்தின் சுவர் இடிந்து பள்ளி கூரையின் மீது சனிக்கிழமை விழுந்தது. இந்த சம்பவத்தில் பத்து பள்ளி மாணவர்கள் காயமடைந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
உடனடியாக மீட்புப் பணிகளைத் தொடங்கிய பள்ளி ஊழியர்கள், இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த மாணவர்களை வெளியே மீட்டனர். நான்கு மாணவர்கள் பலத்த காயங்களுடனும், மற்ற ஆறு பேர் லேசான காயங்களுடனும் தப்பினர் என்று போலீஸார் கூறினர்.
Advertisement
Advertisement
காயமடைந்த அனைத்து மாணவர்களும் சிகிச்சைக்காக பி.கே. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அவர்களது குடும்பத்தினர் பள்ளிக்கும் பின்னர் மருத்துவமனைக்கும் விரைந்தனர்.
போலீஸாரும் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். விபத்து நடந்த உடனேயே மாணவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அருகிலுள்ள கட்டடம் பாதுகாப்பு விதிமுறைகளின்படி கட்டப்பட்டதா என்பது குறித்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Ten school students were injured after a wall of an under-construction building adjacent to a private school collapsed onto a school roof on Saturday, said police.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.