பிலிப்பின்ஸில் பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 3 மாணவர்கள் பலி
பிலிப்பின்ஸில் பள்ளியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 மாணவர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப்பின்ஸில் பள்ளியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 மாணவர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிலிப்பைன்ஸில் உள்ள அரசு நடத்தும் உயர்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை இருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 3 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
ஐந்து பேர் காயமடைந்தனர் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
இந்த விவகாரத்தில் சம்பவம் நடந்த உயர்நிலைப் பள்ளியின் மாணவர் ஒருவர் உட்பட, இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர்.
மேலும் சம்பவம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பள்ளியில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, பாதுகாப்பை பலப்படுத்த அப்பகுதியில் கூடுதல் போலீஸ் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.
Two persons opened fire in a high school in the central Philippines on Monday, killing three students and wounding another five, police officials said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.