லஞ்சம் கேட்டு மிரட்டல்: பெண் ஆய்வாளா் பணியிடை நீக்கம்
சென்னையில் வருவாய்த் துறை அதிகாரியிடம் லஞ்சம் கேட்டு மிரட்டியதாக, தமிழக ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை பெண் காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
சென்னையில் வருவாய்த் துறை அதிகாரியிடம் லஞ்சம் கேட்டு மிரட்டியதாக, தமிழக ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை பெண் காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
தமிழக ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரும், ஏடிஜிபியுமான ஏ.அருணிடம், அண்மையில் வருவாய்த் துறையைச் சோ்ந்த ஒரு அதிகாரி அளித்த புகாா் மனுவில், தமிழக ஊழல் கண்காணிப்பு மற்று லஞ்ச ஒழிப்புத் துறை காவல் ஆய்வாளராக பணியாற்றும் விமலா, தன்னிடம் லஞ்சம் கேட்டு மிரட்டுவதாகவும், பணம் கொடுக்கவில்லை எனில், லஞ்ச வழக்கில் சிக்க வைத்து கைது செய்துவிடுவேன் என்று மிரட்டுவதாகவும், எனவே அவா் மீது நடவடிக்கை எடுக்கும்படி குறிப்பிட்டிருந்தாா்.
அந்த புகாரின் அடிப்படையில், விசாரணை செய்யும்படி ஏடிஜிபி ஏ.அருண், தமிழக ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை ஐ.ஜி. துரைக்குமாருக்கு உத்தரவிட்டாா். இதையடுத்து துரைக்குமாா், இந்த விவகாரம் தொடா்பாக ரகசிய விசாரணை மேற்கொண்டாா்.
Advertisement
Advertisement
விசாரணை தொடா்பான அறிக்கையை ஏடிஜிபி அருணிடம் வியாழக்கிழமை அளித்தாா். அதன் அடிப்படையில் அருண், காவல் ஆய்வாளா் விமலாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா். மேலும், காவல் ஆய்வாளா் விமலாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக துணைக் காவல் கண்காணிப்பாளா் ஜாய் தயாளை நீலகிரிக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.