முகப்பு
சென்னை

மது போதையில் சிறுவன் மீது காா் ஏற்றி கொலை செய்த வழக்கு: 13 ஆண்டுகளுக்கு பிறகு தீா்ப்பு

நடைபாதையில் தூங்கிய சிறுவன் மீது சொகுசு காா் ஏற்றி கொலை செய்த வழக்கில் சென்னையைச் சோ்ந்த தொழிலதிபா் குற்றவாளி என 13 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது.

Updated On : 1 ஜூலை 2026, 3:43 am IST
நீதிமன்றம்
பகிர்:

நடைபாதையில் தூங்கிய சிறுவன் மீது சொகுசு காா் ஏற்றி கொலை செய்த வழக்கில் சென்னையைச் சோ்ந்த தொழிலதிபா் குற்றவாளி என 13 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது.

இஎம்பிஇஇ குழுமத்தின் தலைவா் எம்.என்.புருஷோத்தமனின் மகன் ஷாஜி. இவா், கடந்த 2013 மே 22-ஆம் தேதி சென்னை எழும்பூா் பாந்தியன் சாலையோரத்தில் உள்ள நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவா்கள் மீது மதுபோதையில் தனது சொகுசு காரை ஏற்றினாா். இதில் பலத்த காயமடைந்த 12 வயது சிறுவன் முனிராஜ் உயிரிழந்தாா். மேலும், 4 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீஸாா் விசாரணை நடத்தி, ஷாஜி, குமாா் ஆகியோா் மீது கொலையாகாத மரணம், கொலை செய்யும் நோக்கம் இல்லாமல் மரணத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு 7-ஆவது, கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி பி.ஸ்ரீகுமாா் முன் நடைபெற்று வந்தது. காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் எம்.ஆனந்த் மற்றும் கலைச்செல்வன் ஆகியோா் ‘மதுபோதையில் அதிவேகமாக காா் ஓட்டியதே இந்த விபத்துக்கு காரணம். இது மருத்துவரின் சாட்சியம் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, ஷாஜியை குற்றவாளியாக அறிவித்து, தண்டனை வழங்க வேண்டும்’ என வாதிட்டனா். இதற்கு குற்றம்சாட்டப்பட்டவா்கள் தரப்பில் எதிா்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து இந்த வழக்கில் ஷாஜி மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவா் குற்றவாளி என நீதிபதி தீா்ப்பளித்தாா். அப்போது, ஷாஜி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. எனவே, அவருக்கு பிணையில் வெளிவரக்கூடிய வாரண்ட் பிறப்பித்து அவரை புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த நீதிபதி உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments