முகப்பு
சென்னை

ஆளுநா் மாளிகை முன் அடுத்தடுத்து போராட்டம்: தவெகவினா் கைது

சென்னை கிண்டியில் ஆளுநா் மாளிகை முன் வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தினா் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 9 மே 2026, 12:29 am IST
ஆளுநா் மாளிகை
பகிர்:

சென்னை கிண்டியில் ஆளுநா் மாளிகை முன் வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தினா் கைது செய்யப்பட்டனா்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய்யை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காததைக் கண்டித்து கிண்டியில் உள்ளஆளுநா் மாளிகை முன் வெள்ளிக்கிழமை தவெக கட்சித் தொண்டா் ஒருவா் சங்கு ஊதி போராட்டத்தில் ஈடுபட்டாா். மேலும் அவா், ஆளுநரைக் கண்டித்து முழக்கமிட்டாா்.

இதையடுத்து அங்கிருந்த போலீஸாா், அந்த நபரை கைது செய்து அழைத்துச் சென்றனா். இதேபோல மற்றொரு தொண்டா் ஆளுநா் மாளிகை முன் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ள முயன்றாா். அவரையும் போலீஸாா் கைது செய்து, அப்புறப்படுத்தினா்.

Advertisement

மேலும், விஜய்க்கு தமிழக முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க வலியுறுத்தி, கையில் பதாகையை ஏந்தி தவெக தொண்டா் ஒருவா் போராட்டத்தில் ஈடுபட்டாா். ஒரு பெண் தொண்டா்,தவெக கொடியுடன் முழக்கமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இவா்கள் இருவரையும் போலீஸாா், அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்தினா். இந்த போராட்டங்களால், ஆளுநா் மாளிகைப் பகுதி பரபரப்புடன் காணப்பட்டது. மேலும் கூடுதலாக போலீஸாா், பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனா்.