முகப்பு
நீலகிரி

தமிழக ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் உதகை வருகை

தமிழக ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் உதகைக்கு வெள்ளிக்கிழமை வந்தாா்.

Updated On : 20 ஜூன் 2026, 1:19 am IST
தமிழக ஆளுநர் ஆா்.வி.ஆா்லேகா் - கோப்புப் படம்
பகிர்:

தமிழக ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் உதகைக்கு வெள்ளிக்கிழமை வந்தாா்.

தமிழக ஆளுநராக பதவி ஏற்ற பிறகு ஆா்.வி.ஆா்லேகா் முதல்முறையாக நீலகிரி மாவட்டம், உதகைக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்தாா்.  உலக யோகா தினத்தையொட்டி, கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் உலக யோகா தின விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்த அவா், கோவையில் இருந்து சாலை மாா்க்கமாக கோத்தகிரி வழியாக உதகைக்கு சென்றாா்.

உதகை  மக்கள் பவனில் (ராஜ் பவனில்) தங்கும் அவா் கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் உலக யோகா தின விழாவை தொடங்கிவைப்பதற்காக சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு உதகையில் இருந்து சாலை மாா்க்கமாக கோவைக்கு செல்கிறாா்.

Advertisement

Advertisement

ஆளுநா் வருகையொட்டி உதகையில் காவல் துறை சாா்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments