காஞ்சிபுரம்

அரிமா சங்கம் சார்பில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு

DIN


மாமல்லபுரம் கடலலைகள் அரிமா சங்கம் மற்றும் பல்லவன் சிட்டி அரிமா சங்கம் சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்கான வளைகாப்பு நிகழ்ச்சி பூஞ்சேரி சமுதாய நலக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
கடலலைகள் அரிமா சங்க வட்டாரத் தலைவர் ஏ.எச்.அப்துல் ஹமீது தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கர்ப்பிணிகளுக்கு சடங்குகளைச் செய்து சீர்வரிசைகள் மற்றும் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கடலலைகள் அரிமா சங்க நிர்வாகிகள் இ.கே.துரைராஜ், எஸ்.விஜயகுமார், தகலாராம், விக்டர், குணசேகர் மற்றும் சமூக நலத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டன.
வளைகாப்பு விழாவில் கலந்து கொண்ட 50 கர்ப்பிணிகளுக்கு நலங்கு வைத்து, வளையல்கள் அணிவிக்கப்பட்டன. அவர்களுக்கு பரிசுப் பொருள்கள் மற்றும் சீர்வரிசை கொடுத்து, வளைகாப்பு நடத்தி, சீமந்த உணவு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT