முகப்பு
காஞ்சிபுரம்

பிப். 12-இல் அரசு ஓய்வூதியர்களுக்கான குறைதீர் கூட்டம்

ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கான ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

Updated On : 15 ஜனவரி 2019, 4:10 am IST
பகிர்:


ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கான ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 
இக்கூட்டம் பிப்.12 காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாநில ஓய்வூதியர் இயக்குநர் தலைமையில் நடைபெறவுள்ளது. ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பாக குறைகள் இருந்தால், அதற்கான முறையீட்டை மூன்று நகல்களில் மாவட்ட ஆட்சியருக்கு வரும் 28ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். 
குறிப்பிட்ட தேதிக்குள் பெறப்படும் முறையீடுகளின் மீது மட்டுமே அறிக்கையை சம்பந்தப்பட்ட துறையிடமிருந்து பெற்று பிப்ரவரி 12ஆம் தேதி நடவடிக்கை விவரம் தெரிவிக்கப்படும். எனவே, ஓய்வூதியர்கள் தங்களது முறையீடுகளை குறிப்பிட்ட தேதிக்குள் அனுப்பி வைத்து பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments