எஸ்.பி. அலுவலகம் முன் இளைஞர் தற்கொலை முயற்சி
காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அலுவலகம் முன்பு இளைஞர் ஒருவர் புதன்கிழமை தற்கொலைக்கு முயன்றார்.
காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அலுவலகம் முன்பு இளைஞர் ஒருவர் புதன்கிழமை தற்கொலைக்கு முயன்றார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் முன்பு எப்போதும் போலீஸாரின் நடமாட்டம் இருப்பதோடு காவலர்களும் பாதுகாப்புப் பணியில் இருப்பர்.
இந்நிலையில், இளைஞர் ஒருவர் புதன்கிழமை காலையில் எஸ்.பி.அலுவலகம் முன்பு தன் கையில் வைத்திருந்த தின்னர் எனப்படும் ரசாயனத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப் பார்த்த போலீஸார் ரசாயனத்தை குடிக்க விடாமல் அவரைத் தடுத்து நிறுத்தினர். மேலும், அவரை அழைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் திருவண்ணாமலை மாவட்டம், செய்யூர் பகுதியைச் சேர்ந்த பாபு என்பது தெரிய வந்தது. குடும்பப் பிரச்னை காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததால் ரசாயனத்தைக் குடித்துள்ளார். அதையடுத்து, அவரை மனநலஆலோசனை மையத்துக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.