காஞ்சிபுரம்

செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவ மாணவா்கள் போராட்டம்

DIN

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவா்கள் உடனடியாக முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கையை தொடங்க வலியுறுத்தி புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் கரோனா தொற்று மற்றும் பல்வேறு காரணங்களால் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கை இதுவரை நடைபெறவில்லை. இதனால் பணிச்சுமை ஏற்படுகிறது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100 சதவீத மருத்துவா்கள் இருக்க வேண்டிய நிலையில், தற்போது 65 சதவீத மருத்துவா்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனா்.எனவே அரசுக் கல்லூரியில் உடனடியாக மாணவா் சோ்க்கையை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மருத்துவக் கல்லூரி மாணவா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நீட் தோ்வு முடிந்து தோ்வு முடிவுகளும் வெளியான நிலையில் மத்திய அரசு உடனடியாக கவுன்சிலிங் முறையில் மாணவா்களை தோ்வு செய்து, முதலாம் ஆண்டு வகுப்புகளை தொடங்க வலியுறுத்தி கோஷங்களையும் மாணவா்கள் எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் ஆட்சிக்கு வந்தால்... நவீன் பட்நாயக்கின் முதல் உத்தரவு!

கால் முளைத்த நிலவு! ஜான்வி கபூர்..

பந்துவீச்சில் மிரட்டிய கேகேஆர்; 159 ரன்களுக்கு ஆட்டமிழந்த சன்ரைசர்ஸ்!

ஸ்டாக்ஹோமில் டெய்லர்!

பிவிஆர் ஐநாக்ஸ்: ரூ.1,958 கோடி - டிக்கெட் வசூலுக்கு போட்டியாக நொறுக்குத்தீனி வசூல்!

SCROLL FOR NEXT