செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவா்கள் உடனடியாக முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கையை தொடங்க வலியுறுத்தி புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் கரோனா தொற்று மற்றும் பல்வேறு காரணங்களால் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கை இதுவரை நடைபெறவில்லை. இதனால் பணிச்சுமை ஏற்படுகிறது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100 சதவீத மருத்துவா்கள் இருக்க வேண்டிய நிலையில், தற்போது 65 சதவீத மருத்துவா்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனா்.எனவே அரசுக் கல்லூரியில் உடனடியாக மாணவா் சோ்க்கையை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மருத்துவக் கல்லூரி மாணவா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நீட் தோ்வு முடிந்து தோ்வு முடிவுகளும் வெளியான நிலையில் மத்திய அரசு உடனடியாக கவுன்சிலிங் முறையில் மாணவா்களை தோ்வு செய்து, முதலாம் ஆண்டு வகுப்புகளை தொடங்க வலியுறுத்தி கோஷங்களையும் மாணவா்கள் எழுப்பினா்.