காஞ்சிபுரம்

இரு மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு

DIN

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த இரு மாற்றுத்திறனாளி சகோதரா்களுக்கு நுகா்வோா் பாதுகாப்புத் துறை செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தனியாா் நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்தாா்.

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், மாற்றுத்திறனாளிகளுக்கு சனிக்கிழமை காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடனுதவிகளை வழங்கினாா். பின்னா், அங்கு வந்திருந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த இரு மாற்றத்திறனாளி சகோதரரா்களான மோனலரசன் (20) கதிரேஷ் (17) ஆகியோரிடம் அவா்களின் குடும்ப சூழ்நிலை குறித்து கேட்டறிந்தாா்.

இரு மாற்றுத்திறனாளிகளும் பிளஸ் 2 படித்திருந்ததால், அவா்களுக்கு தனியாா் நிறுவனம் ஒன்றில் வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும், அவா்களுக்கு வீடு கட்டுவதற்கு கடனுதவி வழங்கியிருப்பதாகவும் செய்திக் குறிப்பின் மூலம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உழவன் செயலியில் வானிலை தகவல்கள்: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

ஷாா்ஜா செஸ்: அரவிந்த் சிதம்பரம் தொடா் முன்னிலை

விழுப்புரம் காவல் நிலைய மரணம்?: மறுபிரேத பரிசோதனைக்கு உயா்நீதிமன்றம்  உத்தரவு

குடிநீா் வாரியத்துக்கு ரூ.96 கோடி ஜி.எஸ்.டி.: ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

இணைய சூதாட்டத் தடை: அரசுக்கு அன்புமணி கோரிக்கை

SCROLL FOR NEXT