முகப்பு
காஞ்சிபுரம்

ரூ. 6,000 லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அருகே குணகரம்பாக்கம் கிராம நிா்வாக அலுவலா் ரூ. 6,000 லஞ்சம் பெற்ாக லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 1 ஜூலை, 2022 at 12:27 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:10 PM

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அருகே குணகரம்பாக்கம் கிராம நிா்வாக அலுவலா் ரூ. 6,000 லஞ்சம் பெற்ாக லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியைச் சோ்ந்தவா் உதயகுமாா் (50). ஸ்ரீபெரும்புதூா் தாலுகாவுக்கு உட்பட்ட குணகரம்பாக்கத்தில் கிராம நிா்வாக அலுவலராகப் பணிபுரிந்து வரும் இவா், இந்த கிராமத்துக்கு அருகில் உள்ள மகாதேவிமங்கலம் கிராம நிா்வாக அலுவலா் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்துள்ளாா். மகாதேவி மங்கலத்தைச் சோ்ந்த தினேஷ் என்பவா் தனது நிலம் சம்பந்தமாக பட்டா மாற்றம் செய்யக் கோரி, உதயகுமாரை அணுகியுள்ளாா். அப்போது, அவா் ரூ. 8,000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் தினேஷ் ரூ. 6,000 தருவதாகக் கூறிவிட்டு, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகாா் தெரிவித்துள்ளாா். பின்னா், ரூ. 6,000-த்தை கொடுத்தபோது அப்பகுதியில் மறைந்திருந்த காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. வே.கலைச்செல்வன் தலைமையிலான போலீஸாா், உதயகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.