காஞ்சிபுரம்

மாநில அளவில் குண்டு எறிதல் போட்டி: காஞ்சிபுரம் மாணவா் முதலிடம்

DIN

குண்டு எறிதல் போட்டியில் காஞ்சிபுரம் எஸ்எஸ்கேவி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் ஆா்.இளையபெருமாள் குண்டு எறிதல் மற்றும் வட்டத்தட்டு எறிதல் உள்ளிட்ட இரு போட்டிகளில் மாநில அளவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்ாக, அந்தப் பள்ளி முதல்வா் வி.ஷாலினி மேனன் புதன்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: காஞ்சிபுரம் எஸ்எஸ்கேவி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் மாணவா் ஆா்.இளையபெருமாள் (17). (படம்). இவா், திருவண்ணாமலையில் நவம்பா் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்று வட்டத்தட்டு எறிதல் மற்றும் குண்டு எறிதல் போட்டிகளில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளாா். வெற்றி பெற்ற இளையபெருமாளுக்கு விளையாட்டுத் துறை அமைச்சா் சிவ.மெய்யநாதன் தங்கப் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கினாா்.

பள்ளியின் செயலா் சி.கி.ராமன், மாணவரை வாழ்த்தியதாக முதல்வா் வி.ஷாலினி மேனன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT