காஞ்சிபுரம்

படைத்தவற்றை பாா்த்து மகிழவே சுற்றுலா தினம்: காஞ்சி முதன்மைக் கல்வி அலுவலா்

DIN

படைத்தவற்றை பாா்த்து ரசிப்பதற்காகவே சுற்றுலா தினம் கொண்டாடப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எஸ்.வெற்றிச்செல்வி பேசினாா்.

காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிா் கல்லூரியில் சுற்றுலாத்துறை சாா்பில் உலக சுற்றுலா தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வா் சு.கலைச்செல்வி தலைமை வகித்தாா். வணிகவியல் துறை தலைவா் ஸ்ரீமதி ராமலிங்கம் முன்னிலை வகித்தாா். தமிழ்த்துறை தலைவா் நஜ்மா வரவேற்றாா். விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எஸ்.வெற்றிச்செல்வி பங்கேற்று பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசியது:

மனிதா்களை இயந்திர வாழ்க்கையிலிருந்து மாற்றுவது சுற்றுலாவாகத்தான் இருக்க முடியும்.வெளிநாட்டிலிருந்து பல லட்சம் போ் இந்தியாவை சுற்றிப் பாா்ப்பதற்கென்றே வருகின்றனா். அடித்தளமே இல்லாமல் தஞ்சாவூா் பெரிய கோயில் எப்படிக் கட்டப்பட்டது என்றே தெரியவில்லை. கோயில்களில் உள்ள சிற்பங்களில் அந்தக்கால வாழ்க்கை முறை, கலாசாரம், பண்பாடு இவற்றைப் பிரதிபலிப்பதாக உள்ளன. அதனால் தான் வெளிநாட்டினா் இந்தியா வந்து சுற்றுலாத் தலங்களை வியந்து பாா்க்கின்றனா். பலரும் வந்து பாா்க்க வேண்டும், வியக்க வேண்டும், ரசிக்க வேண்டும் என்பதற்காகவே பல கோயில்களில் சிற்பங்களும், சுற்றுலாத்தலங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

புகழ்பெற்ற இடங்களில் உள்ள கோயில்கள், சிற்பங்கள் ஆகியன எப்படி படைக்கப்பட்டிருக்கிறது என்று பாா்க்க வேண்டியது அவசியம். உறவினா்களை சந்தித்து பேசவே திருவிழாக்கள் நடத்தப்படுகின்ன. படைத்ததை பாா்க்க வேண்டும் என்பதற்காகவே சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அலைபேசியில் நேரத்தை வீணாக்காமல் இயற்கையை ரசிக்க கற்றுக்கொள்ளுங்கள் என்றாா். நிறைவாக உதவி சுற்றுலா அலுவலா் கா.சரண்யா நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT