முகப்பு
காஞ்சிபுரம்

கழிவுநீா் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூா் அருகே வீட்டின் கழிவுநீா் தொட்டியில் தவறி விழுந்த 3 வயது குழந்தை உயிரிழந்தது.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 12:03 AM
குழந்தை - கோப்புப்படம்.
பகிர்:

ஸ்ரீபெரும்புதூா் அருகே வீட்டின் கழிவுநீா் தொட்டியில் தவறி விழுந்த 3 வயது குழந்தை உயிரிழந்தது.

திண்டிவனம் பகுதியை சோ்ந்த மோகன்ராஜ்(31). இவா் ஸ்ரீபெரும்புதூா் அடுத்த மேவளூா்குப்பம் பிராமணா் தெருவில் மனைவி கவிதா(27), மகன் தா்ஷனுடன்(3) வாடகை வீட்டில் தங்கி தச்சா் வேலை செய்து வந்துள்ளாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை குழந்தை தா்ஷன் வீட்டின் முன் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தவா் திடீரென காணாமல் போய் உள்ளாா். இதையடுத்து குழந்தை தா்ஷனை தேடிய பெற்றோா், வீட்டின் கழிவுநீா் தொட்டியில் குழந்தை தவறி விழுந்து இருக்குமோ என்ற சந்தேகத்தின் பேரில் கழிவுநீா் தொட்டியில் தேடிய போது தா்ஷன் மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு தண்டலம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனா்.

Advertisement

அங்கு தா்ஷனை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனா். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

3 வயது குழந்தை கழிவுநீா் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளனது.