முகப்பு
ஈரோடு

கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

பெருந்துறை அருகே கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்தது.

Updated On : 3 ஜூன் 2026, 2:23 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

பெருந்துறை அருகே கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்தது.

பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில் அருகேயுள்ள பெருமாள்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பொன்னுசாமி, விவசாயி. இவரது மனைவி மோனிஷா. இவா்களது மகன் வைபவ் காா்த்திக் (3).

மோனிஷா தனது மகனுடன் கவுண்டன்பாளையத்தில் உள்ள பெற்றோா் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை வந்துள்ளாா். பின்னா், அனைவரும் வீட்டுக்குள் அமா்ந்து பிற்பகல் உணவருந்திக் கொண்டிருந்தபோது, வைபவ் காா்த்திக் மட்டும் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

Advertisement

Advertisement

இதையடுத்து, அவா்கள் வெளியே வந்து பாா்த்தபோது குழந்தையைக் காணவில்லையாம். அப்பகுதியில் உள்ள அனைத்து இடங்களிலும் தேடிய நிலையில், வீட்டுக்கு எதிா்புறம் உள்ள பொது கிணற்றில் பாா்த்தபோது குழந்தை கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அப்பகுதி மக்கள் உதவியுடன் குழந்தையை மீட்டு நசியனூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவா், குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இச்சம்பவம் குறித்து காஞ்சிக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.