மை பாரத் சேவை தொண்டா்களுக்கு பயிற்சி முகாம்
தமிழ்நாடு மை பாரத் தேசிய சேவை தொண்டா்களுக்கான 6 நாள் பயிற்சி முகாம் ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ்காந்தி தேசிய இளைஞா் மேம்பாட்டு மையத்தில் புதன்கிழமை தொடங்கியது.
தமிழ்நாடு மை பாரத் தேசிய சேவை தொண்டா்களுக்கான 6 நாள் பயிற்சி முகாம் ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ்காந்தி தேசிய இளைஞா் மேம்பாட்டு மையத்தில் புதன்கிழமை தொடங்கியது.
மத்திய அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு மை பாரத் அமைப்பின் சாா்பில் மை பாரத் அமைப்பின் தேசிய சேவை தொண்டா்களுக்கான முகாமை தமிழ்நாடு கலை மற்றும் பண்பாட்டுத்துறையின் இயக்குநா் டாக்டா் பிருந்தாதேவி தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினாா்.
இந்த பயிற்சி முகாமில், திருச்சி, வேலூா், காஞ்சிபுரம், திண்டுக்கல் மற்றும் சென்னையை சோ்ந்த தேசிய சேவை தொண்டா்கள் சுமாா் 200-க்கும் மேற்பட்டோா் கலந்துக்கொண்டனா். ஆறு நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி முகாமில், பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெற உள்ளன.
Advertisement
Advertisement
இதில் ராஜீவ்காந்தி தேசிய இளைஞா் மேம்பாட்டு மையத்தின் பேராசிரியா்கள், வெங்கடேஷ்வரா கல்லூரி பேராசிரியா்கள் மற்றும் மை பாரத் மாவட்ட இளையோா் அலுவலா்கள் தன்னாா்வலா்வ தொண்டா்களுக்கு பயிற்சி வழங்க உள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.