முகப்பு
தமிழ்நாடு

முதல்வர் விஜயுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்து செஸ் வீரர் பிரக்ஞானந்தா வாழ்த்துப் பெற்றார்.

Updated On : 8 ஜூன் 2026, 10:55 am IST
முதல்வர் விஜய் - செஸ் வீரர் பிரக்ஞானந்தா.
பகிர்:

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை இன்று சந்தித்து செஸ் வீரர் பிரக்ஞானந்தா வாழ்த்துப் பெற்றார்.

நார்வே செஸ் போட்டி மே 25 முதல் ஜூன் 5ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் குகேஷ், பிரக்ஞானந்தா, மாக்னஸ் கால்சன், வின்சென்ட் கெய்மர் போன்ற ஜாம்பவான்கள் கலந்துகொண்டனர்.

இறுதிச் சுற்றில் ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை வீழ்த்தி புகழ்பெற்ற நார்வே செஸ் தொடரை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார் பிரக்ஞானந்தா.

Advertisement

Advertisement

இதைத்தொடர்ந்து நார்வே செஸ் பட்டம் வென்ற தமிழக வீரர் ஆர். பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் விஜய் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

நார்வே செஸ் தொடரில் முன்னணி வீரரான கார்ல்செனை தமிழக வீரர் பிரக்ஞானந்தா இரண்டு முறை வீழ்த்தி அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Chess player Praggnanandhaa met Chief Minister Vijay at the Chennai Secretariat and received his blessings/wishes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.