பிரக்ஞானந்தா நம்பமுடியாத ஒரு போராளி..! கார்ல்சென் புகழாரம்!
நார்வே செஸ் தொடரை வென்ற பிரக்ஞானந்தா பற்றி மாக்னஸ் கார்ல்சென் கூறியிருப்பதாவது...
நார்வே செஸ் தொடரை முதல்முறையாக வென்று வரலாறு படைத்துள்ள பிரக்ஞானந்தாவுக்கு உலகின் நம்.1 வீரர் மாகன்ஸ் கார்ல்சென், “பிரக்ஞானந்தா நம்பமுடியாத ஒரு போராளி...” எனக் கூறியுள்ளார்.
மிகுந்த சுவார்சியமாகச் சென்ற நார்வே செஸ் போட்டி இறுதிச் சுற்றில் பிரக்ஞானந்தா 32 நகர்த்தலில் வின்சென்ட் கெய்மரை வீழ்த்தி 18 புள்ளிகளுடன் முதல் இந்தியராக இந்தப் பட்டம் வென்றார்.
முதலிடத்தில் நீடித்த வெஸ்லி ஸோ கடைசி சுற்று ஆட்டத்தில் டிராவில் முடிந்ததால், பிரக்ஞானந்தா கோப்பை வெல்ல ஏதுவாக அமைந்தது.
Advertisement
Advertisement
பெரிதும் எதிர்பார்த்த கார்ல்சென் இந்தத் தொடரில் நான்காவது இடத்தில் நிறைவு செய்தார். சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா குறித்து கூறியிருப்பதாவது:
பிரக்ஞானந்தா கடைசியாக நான்கு கிளாசிக்கல் போட்டிகளில் வென்றுள்ளார். இது மிகவும் பித்துப் பிடித்த நிலை. கிளட்ச் என்பது இப்படித்தான் இருக்கும். பிரக்ஞானந்தா நம்பமுடியாத ஒரு போராளி. அதற்காக அவர் பரிசு பெறுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.
இந்தத் தொடரில் தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் வென்ற பிரக்ஞானந்தா கிளாசிக்கல் கேமில் கார்ல்செனை இருமுறை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
Praggnanandhaa is an incredible fighter! after Norway chess champions Carlsen heaps praise!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.