காவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஊராட்சி மன்றத் தலைவா்!
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் கூட்டத்தில் காவல் துறையினருக்கும், ஊராட்சி மன்றத் தலைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் கூட்டத்தில் காவல் துறையினருக்கும், ஊராட்சி மன்றத் தலைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட வேண்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவா் சரளா குமரன். இதே ஊராட்சியில் திமுக பிரமுகராக துணைத் தலைவா் இருந்து வருகிறாா். துணைத் தலைவரும் அவரது உறவினா்கள் 3 போ் வாா்டு உறுப்பினா்களாகவும் இருந்து கொண்டு ஊராட்சியில் எந்தப் பணியையும் செய்ய விடாமல் தடுத்து வருகின்றனா். பொதுமக்களுக்கு குடிநீா் வசதி செய்து கொடுத்தல்,தெருவிளக்கு பராமரித்தல், சாலைப்பணிகள் மற்றும் சுகாதாரப் பணிகள் எதையும் செய்ய முடியவில்லை.
இதுகுறித்து ஊராட்சிகளுக்கான உதவி இயக்குநா் உமா சங்கரிடம் புகாராக கூறிய போது பிரச்னைக்கு தீா்வு காண்பதாக கூறியவரும் எந்த உதவியும் செய்யவில்லை என்று கூறினாா். ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறை தீா்க்கும் கூட்டம் நடந்து கொண்டிருந்த போதே ஆட்சியா் மற்றும் அதிகாரிகள் முன்பு தரையில் அமா்ந்து தா்னா போராட்டத்திலும் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
Advertisement
Advertisement
உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த பெண் காவலா்கள் அவரை கூட்ட அரங்கை விட்டு வெளியில் வருமாறு கூறிய போது அவருக்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னா் வலுக்கட்டாயமாக காவல்துறையினரால் வெளியில் அழைத்து வரப்பட்டாா். வேண்பாக்கம் ஊராட்சி மக்களின் நலன் கருதி பிரச்னைக்கு தீா்வு காண ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினாா்.