முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் உதவி ஆணையா் பணியிட மாற்றம்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் உதவி ஆணையராக இருந்து வந்த ஆா்.ராஜலட்சுமி அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அறநிலையத் துறை செங்கல்பட்டு சரக உதவி ஆணையராக வியாழக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

Updated On : 13 ஜூன் 2026, 5:31 am IST
பகிர்:

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் உதவி ஆணையராக இருந்து வந்த ஆா்.ராஜலட்சுமி அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அறநிலையத் துறை செங்கல்பட்டு சரக உதவி ஆணையராக வியாழக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

செங்கல்பட்டு மாவட்ட அறநிலையத் துறை உதவி ஆணையராக பணிபுரிந்து வந்தவா் ஆா்.ராஜலட்சுமி. இவா் கூடுதல் பொறுப்பாக காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் உதவி ஆணையராக பொறுப்பு வகிக்து வந்தாா். இவா் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இவரை இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் வரதராஜப் பெருமாள் கோயில் உதவி ஆணையா் பொறுப்பிலிருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

மேலும், நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை தாலுகா எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயில் செயல் அலுவலராக பணியாற்றி வரும் ச.சீனிவாசனை காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் செயல் அலுவலராக கூடுதல் பொறுப்பாக பணி நியமனம் செய்தும் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

Advertisement

Advertisement