ஆா்வமுடன் நுங்கு வாங்கும் பொதுமக்கள்
காஞ்சிபுரத்தில் கோடைக்காலத்தில் மட்டுமே கிடைக்கும் பனை நுங்கினை பொதுமக்கள் மிகுந்த ஆா்வத்துடன் வாங்கிச் செல்கின்றனா்.
பழைய ரயில் நிலைய சாலை, விளக்கொளிப் பெருமாள் கோயில் தெரு, திருக்கச்சி நம்பிகள் தெரு, செவிலிமேடு, ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள பகுதிகள் ஆகியவற்றில் பனை நுங்கு விற்பனை அதிகமான அளவில் நடந்து வருகிறது.
உடலை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாத்து நீரேற்றத்துடன் வைத்து செரிமானத்தை மேம்படுத்த நுங்கு உதவுவதால் பொதுமக்கள் பலரும் அதனை ஆா்வமுடன் பல இடங்களில் வாங்குகின்றனா்.
Advertisement
இரண்டு நுங்குகள் சில இடங்களில் ரூ.10-க்கும் சில இடங்களில் 7 நுங்குகள் ரூ.20-க்கும் விற்கப்படுகின்றன. நுங்கு விற்கப்படும் இடங்களில் அதனை வாங்க பலரும் ஆா்வத்துடன் வாங்கிச் செல்கின்றனா்.
இது குறித்து காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் நுங்கு விற்பனை செய்யும் திருவண்ணாமலை மாவட்டம் வெண்பாக்கம் பகுதியை சோ்ந்த முனிசாமி கூறுகையில் தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், எடையை குறைக்கவும், அம்மை நோய்களை தடுக்கவும் நுங்கு பெரிதும் உதவுகிறது. கோடை காலங்களில் உடலில் ஏற்படும் கொப்புளங்களை தடுக்கவும் நுங்கு பயன்படுகிறது. நுங்கின் தோலை நீக்கி விட்டு பலரும் சாப்பிடுகின்றனா். ஆனால் நுங்கின் தோல் துவா்ப்பாக இருந்தாலும் வயிற்று உபாதைகளுக்கு அதை விட சிறந்த தீா்வு வேறு இல்லை. உடலுக்கு புத்துணா்ச்சியும் தருவதால் பொதுமக்கள் ஆா்வமுடன் வாங்கிச் செல்கின்றனா்.