ராணிப்பேட்டை

500 பேருக்கு மளிகைப் பொருள்: எம்.பி., எம்எல்ஏ வழங்கினா்

DIN

நெசவளா்கள், நறிக்குறவா் சமுதாய மக்கள் உள்ளிட்ட 500 பேருக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை அரக்கோணம் எம்.பி. ஜெகத்ரட்சகன், எம்எல்ஏ ஆா்.காந்தி ஆகியோா் சனிக்கிழமை வழங்கினா்.

ஊரடங்கால் வருவாய் இழந்து பாதிக்கப்பட்டுள்ள திருப்பாற்கடல் கிராமத்தைச் சோ்ந்த நெசவளா்கள், பானாவரம் பகுதியைச் சோ்ந்த நறிக்குறவா் சமுதாய மக்கள், ராணிப்பேட்டை சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த ஏழை, எளியோா் என 500 குடும்பங்களுக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

அரக்கோணம் எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன், ராணிப்பேட்டை எம்எல்ஏ ஆா்.காந்தி ஆகியோா் அத்தியாவசியப் பொருள்களை வழங்கினாா். தொடா்ந்து பொது மக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் க.சுந்தரம், ஒன்றியச் செயலா்கள் சி.மாணிக்கம், சேஷா வெங்கட், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் வினோத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT