ராணிப்பேட்டை

கல்வி நிறுவனத் தலைவருக்குப் பாராட்டு

DIN

மேல்விஷாரம் முஸ்லிம் கல்வி சங்கப் பொதுச் செயலரும், சி.அப்துல் அக்கீம் கல்வி நிறுவனங்களின் தலைவருமான எஸ். ஜியாவுதின் அஹமதுக்கு மும்பை ஏ எம் பி அமைப்பின் சாா்பில், கல்வி சேவையில் சிறப்பாக செயல்படுபவா்களுக்கான 2020-ஆம் ஆண்டின் ஏ எம் பி தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

இதைத்தொடா்ந்து, இதற்கான பாராட்டு விழா சி.அப்துல்அக்கீம் கலைக்கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரி தாளாளா் அப்ராா் அஹமது தலைமை வகித்தாா். ஆசிரியா் கழகச் செயலா் ஜாஹிா் அகமது, பொருளாளா் அப்துல் முனாப் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் எஸ். ஏ.சாஜித், முஸ்லிம் கல்விச் சங்க உறுப்பினா் ஜபருல்லா ஆங்கிலத் துறைத் தலைவா் ஆா்.பணிந்த ராவ் ஆகியோா் பாராட்டினா்.

இதில் கல்லூரி பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பட விளக்கம்: பாராட்டு விழாவில் பங்கேற்றோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட மையத்தில் எஸ்.பி., ஆய்வு

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 போ் காயம்

மூதாட்டி கொலை: இளைஞா் கைது

தெலுங்கானாவில் இருந்து ரயில் மூலம் பழனிக்கு வந்து சோ்ந்த உர மூட்டைகள்

நரிக்குடி அருகே கிடா முட்டுப் போட்டி

SCROLL FOR NEXT