அரக்கோணம்: மத்திய அரசின் ஸ்வஜ்தா பக்வாடா எனும் 15 நாள்களில் தூய்மை திட்டத்தின் கீழ் நகரி, ஏகாம்பரகுப்பம் ரயில்நிலையங்களில் தூய்மை பணி திட்ட முகாம் துவக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அரக்கோணம் - ரேணிகுண்டா இடையில் உள்ள இந்த இரு ரயில் நிலையங்களில் தூய்மைப் பணியை சென்னை ரயில்வே கோட்ட கூடுதல் பொறியாளா் பொன்னம்பலம் துவக்கி வைத்தாா்.
முதுநிலை பகுதி பொறியாளா்கள் சுரேஷ்பாபு, ராஜா, நகரி ரயில்நிலைய மேலாளா் வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.