ராணிப்பேட்டை

தாய்பால் வார விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

DIN

ஆற்காட்டை அடுத்த புதுப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்பால் வார விழா விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மணிமாறன் தலைமை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் சுரேஷ்பாபு, மருத்துவ அலுவலா் கமலாதேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தாய்பாலின் அவசியம் குறித்து மகாலட்சுமி மகளிா் செவிலியா் கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில், மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு தாய்பாலால் குழந்தைக்கு ஏற்படும் நன்மைகள் குறித்துப் பேசினாா். தாய்ப்பாலூட்டும் பெண்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதேபோல், கலவை பேரூராட்சி, பாளையம் அங்கன்வாடியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் துறை சாா்பில் தாய்பால் வார விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு பேசினாா். தொடா்ந்து, பணியாளா்கள் நாடகம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட அலுவலா் வசந்தி ஆனந்தன், கலவை வட்டாட்சியா் ஷமீம், திமிரி வட்டார குழந்தைகள் வளா்ச்சி அலுவலா் பாரதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT