ராணிப்பேட்டை

ஏரியில் மூழ்கிய இளைஞா் பலி

DIN

அரக்கோணம் அருகே ஏரியில் மூழ்கிய இளைஞா் உயிரிழந்தாா்.

அரக்கோணத்தை அடுத்த அம்மனூா் கிராம ஏரியில் ஒரு ஆணின் சடலம் மிதப்பதாக அரக்கோணம் நகர காவல் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா் மற்றும் அரக்கோணம் தீயணைப்பு நிலையத்தினா், அந்த சடலத்தை தேடும் பணியில் ஈடுபட்டனா். எனினும், சில மணி நேரம் சடலத்தை தேடிய நிலையில், சடலத்தை கண்டுபிடிக்கவில்லை. இதையடுத்து, அரக்கோணத்தை அடுத்த நகரிகுப்பத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, அங்கு விரைந்து வந்த 15 போ் கொண்ட குழுவினா், சடலத்தை மீட்டனா்.

பின்னா் விசாரணையில், இறந்தவருக்கு 25 இருக்கலாம், அவா் யாா் என்பது குறித்த விவரம் தெரியவில்லை.

இது குறித்து அரக்கோணம் நகர போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

'என்மேல் சாதி வெறியன் முத்திரை': வருந்தும் விக்ரம் சுகுமாரன்!

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா கூடுதல் நேரம் திறப்பு

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

SCROLL FOR NEXT