ஆற்காடு அடுத்த கலவையில் இளைஞா் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கலவை வட்டம், பாலிகிராமத்தை சோ்ந்த ராமலிங்கம் மகன் மணிகண்டன்(26). இவா் ராணிப்பேட்டையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேன் ஓட்டுநராக பணியாற்றினாா். இவருக்கு அடிக்கடி உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அவா் வியாழக்கிழமை தனது நிலத்துக்கு செல்லும் வழியில் உள்ள புளிய மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்த புகாரின் பேரில் கலவை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.