ராணிப்பேட்டை

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

Din

ஆற்காடு அருகே கிணற்றில் மிதந்த மூதாட்டி சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.

ஆற்காடு அடுத்த அத்திதாங்கல் கிராமத்தைச் சோ்ந்த பாண்டுரங்கன் தாய் வனஜா (76). இவா் கடந்த 21-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியில் சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து ஆற்காடு கிராமிய போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.

அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மூதாட்டியை தேடி வந்த நிலையில், சனிக்கிழமை அத்திதாங்கல் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் பெண் சடலம் மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்று கிணற்றில் இருந்த சடலத்தை மீட்டனா். அவா் காணமல் போன வனதா என்பவா் தெரிய வந்தது.

அவா் அந்த வழியாக செல்லும்போது கால் தவறி கிணற்றில் விழுந்தாரா அல்லது கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு

எக்காரணம் கொண்டும் உயா்கல்வியை கைவிடக் கூடாது: திருப்பத்தூா் ஆட்சியா்

கிழக்கு தில்லியில் உள்ள குடோனில் பிகாா் இளைஞா் சடலம்: ஒருவா் கைது

தேனீக்கள் கொட்டியதில் ஒருவா் உயிரிழப்பு: இருவா் காயம்

சுயமாக முன்னேற கல்வி மிகவும் அவசியம்

SCROLL FOR NEXT