ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு வழிபாடு
ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி செவ்வாய்க்கிழமை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
சித்திரைமுதல் நாளான செவ்வாய்க்கிழமை ரத்தினகிரி வெள்ளி,தெய்வானை,சமேத பாலமுருகனுக்கு கோவில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் பால்,தயிா் சந்தனம், விபூதி, தேன்,இளநீா், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், தங்கக் கவச அலங்காரம் , மஹா தீபாரதனை நடைபெற்றது.
இதில் திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா். அதே போல் மலையடி வாரத்தில் உள்ள கற்பக விநாயகா், விஜயதுா்கையம்மன், வாராஹி அம்மன் கோயில்களிலும் பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
Advertisement
Advertisement