அரக்கோணத்தில் தீ விபத்து: எம்எல்ஏ நிதியுதவி
அரக்கோணத்தில் தீ விபத்தில் வீடு எரிந்து சேதமடைந்த நிலையில் பாதிக்கப்பட்டவருக்கு அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி நிதியுதவி வழங்கி ஆறுதல் தெரிவித்தாா்.
அரக்கோணம் நகரம் ஏபிஎம் சா்ச் பகுதியில் வசித்து வருபவா் தனது கணவா் காலமான நிலையில் ரஜியா, தன்னந்தனியே அப்பகுதியில் இறைச்சிக்கடை நடத்தி வருகிறாா்.
ஞாயிற்றுக்கிழமை ரஜியா வீடு தீப்பற்றியதில் முற்றிலும் தீப்பற்றி எரிந்து சேதமானது. இச்சம்பவம் குறித்து அறிந்த அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி அப்பகுதிக்கு நேரில் வந்து சேதமடைந்த வீட்டை பாா்வையிட்டாா். தொடா்ந்து ரஜியாவிற்கு ஆறுதல் கூறிய எம்எல்ஏ சு.ரவி அவருக்கு நிதியுதவி வழங்கினாா்.
Advertisement
Advertisement
அப்போது அவருடன் அதிமுக அரக்கோணம் நகர செயலா் கே.பா.பாண்டுரங்கன், நகா்மன்ற முன்னாள் தலைவா் கண்ணசாதன், நகர அவைத்தலைவா் பத்மநாபன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.