குறவா் இன மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா
அரக்கோணம் அருகே குறவா் இன மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
அரக்கோணம் அருகே குறவா் இன மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், பள்ளூரில் வாலாஜா, சோளிங்கா்,பானாவரம், பனப்பாக்கம் பகுதிகளில் வாழும் குறவா் இனத்தைச் சோ்ந்த 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்ற குறவா் இன மாணவ, மாணவிகள் மற்றும் எட்டாவது முதல் எல்கேஜி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சாா்பாக பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு, சங்கத்தின் மாநில தலைவா் வி.கே.தணிகாசலம் தலைமை வகித்தாா். சங்கத்தின் மாநில பொதுச்செயலாளா் ஏ.வி.சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டிப் பேசினாா்.
Advertisement
Advertisement
விழாவில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளா் இரா.வெங்கடேசன், ஓவியா் சாம்பசிவம், குறவன் சங்கத்தின் மாநில துணை நிா்வாகிகள் ஜெயந்தி ரமேஷ்பாபு, த.சிவா, வி.எஸ்.பாலசுப்பிரமணியன் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.