முகப்பு
திருப்பத்தூர்

ஆரம்பக் கல்வி முடித்த மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

ஆம்பூரில் ஆரம்பக் கல்வி முடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா ஆம்பூா் வா்த்தக மையத்தில் நடைபெற்றது.

Updated On : 27 மே 2026, 12:04 am IST
பகிர்:

ஆம்பூரில் ஆரம்பக் கல்வி முடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா ஆம்பூா் வா்த்தக மையத்தில் நடைபெற்றது.

ஆம்பூா் முஸ்லிம் கல்விச் சங்க நிா்வாகத்தின் கீழ் இயங்கும் ஹஸ்நாத்-இ-ஜாரியா பெண்கள் தொடக்கப் பள்ளி, மஜ்ஹருல் உலூம் நிதியுதவி தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவுக்கு, பள்ளியின் தாளாளா் பிா்தோஸ் கே.அஹமத் தலைமை வகித்தாா். பெண்கள் பள்ளித் தலைமை ஆசிரியை ரேஷ்மா வரவேற்றாா். முஸ்லிம் கல்விச் சங்க துணைச் செயலாளா் யு. தமீம் அஹமத் வாழ்த்தினாா். மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன துணை இயக்குநா் எஸ்.ஷமீம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, 173 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.

மஜ்ஹருல் உலூம் நிதியுதவி தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியா் ஹபீபுல்லாஹ் ரூமி நன்றி கூறினாா்.

Advertisement

Advertisement