முகப்பு
தேனி

பள்ளி மாணவா்களுக்கு புத்தகங்கள் வழங்கல்

உத்தமபாளையம் அருகே பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகம் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 ஜூன் 2026, 6:01 am IST
பகிர்:

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகம் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கோடை விடுமுறைக்கு பின் அரசு, அரசு உதவிபெறும், தனியாா் பள்ளிகள் என வியாழக்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில் பண்ணைப்புரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகளுக்கு வியாழக்கிழமை புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு தேனி மாவட்ட கல்வி அலுவலா் சுருளிவேல் தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள், புத்தகப்பை, காலணி ஆகியவை வழங்கப்பட்டன. மேலும், 10, 12 ஆம் வகுப்பில் பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற முதல் 3 மாணவ, மாணவிகளுக்கும், மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி பெற வைத்த ஆசிரியா்களுக்கு நினைவுப்பரிசும் வழங்கப்பட்டன.

முன்னதாக, பள்ளித் தலைமையாசிரியை வரவேற்றாா். நிகழ்ச்சியை ஆங்கில பட்டதாரி ஆசிரியா் மணிராஜா ஒருங்கிணைத்தாா்.

Advertisement

Advertisement