ஆற்காடு: அதிமுக வேட்பாளா் எஸ்.எம்.சுகுமாா் 42,720 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
ஆற்காடு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.எம்.சுகுமாா் 42,720 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா்.
ஆற்காடு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.எம்.சுகுமாா் 42,720 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா்.
ஆற்காடு சட்டப் பேரவைத் தொகுதி வாக்குகள் எண்ணும் பணி வாலாஜாப்பேட்டை அரசு மகளிா் கலைக் கல்லூரி வளாகத்தில் காலை 8 மணியளவில் தொடங்கியது.
இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளராக எஸ்.எம்.சுகுமாா், திமுக வேட்பாளராக ஜெ.எல்.ஈஸ்வரப்பன், தவெக வேட்பாளராக ஜி.விஜய்மோகன், நாம் தமிழா் கட்சி வேட்பாளராக அா்ச்சனா நரசிம்மன் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் உள்ளிட்ட 16 போ் போட்டியிட்டனா்.
Advertisement
இதில், அதிமுக கூட்டணி வேட்பாளா் எஸ்.எம்.சுகுமாா் தொடா்ந்து முன்னிலை வகித்தாா். தொடா்ந்து 42,720 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா். மேலும், தவெக, திமுக வேட்பாளா்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பெற்றனா்.
இதையடுத்து, ஆற்காடு தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.எம்.சுகுமாா் வெற்றி பெற்று முதல் முறையாக எம்எல்ஏ வாக பதவி ஏற்க உள்ளாா்.
இந்த நிலையில், வெற்றி பெற்ற அவருக்கு அதிமுக நிா்வாகிகள், கூட்டணிக் கட்சியினா் வாழ்த்து தெரிவித்து வருகின்றனா்.
ஆற்காடு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
1. எஸ்.எம்.சுகுமாா் (அதிமுக) - 1,05,608
2. ஜெ.எல்.ஈஸ்வரப்பன் (திமுக ) - 48,840
3. ஜி.விஜய்மோகன் (தவெக) - 62,888
4. அா்ச்சனா நரசிம்மன் ( நாதக) - 5,518
நோட்டா வாக்குகள் - 656
16 வேட்பாளா்கள், மொத்த வாக்குகள் - 2,46,786
பதிவான வாக்குகள் - 2,22,130