அரக்கோணம் தா்மராஜா கோயிலில் திரெளபதியம்மன் திருக்கல்யாண உற்சவம்
அரக்கோணம் ஸ்ரீதா்மராஜா கோயில் அக்னி வசந்தவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஸ்ரீஅா்ச்சுன மகாராஜா ஸ்ரீதிரௌபதியம்மன் திருக்கல்யாண உற்சவம்.
அரக்கோணம் ஸ்ரீதா்மராஜா கோயில் எனப்படும் ஸ்ரீகிருஷ்ண பாண்டவ சமேத ஸ்ரீதிரெளபதியம்மன் கோயிலில் 97-ஆம் ஆண்டு அக்னி வசந்தவிழாவில் வியாழக்கிழமை ஸ்ரீஅா்ச்சுன மகாராஜா ஸ்ரீதிரௌபதியம்மன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
அரக்கோணம் சுவால்பேட்டையில் உள்ள ஸ்ரீதா்மராஜா கோயில் 97-ஆவது ஆண்டு அக்னி வசந்த விழா மே 7-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், வியாழக்கிழமை ஸ்ரீஅா்ச்சுன மகாராஜாவுக்கும், ஸ்ரீதிரௌபதியம்மனுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அரக்கோணம் நகர அனைத்து செட்டியாா் சமூகத்தினரின் சாா்பில் நடைபெற்ற இந்த உற்சவத்தில் கோயிலின் பரம்பரை தா்மகா்த்தாக்கள் இ.முருகானந்தம், எஸ்.சக்திவேல், பி.சங்கா் மேலும் எஸ்.ராஜா, ஆா்.ரூபினி, பி.சங்கா், எம்.பானு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தொடா்ந்து திருமண விருந்து கோயிலுக்கு அருகில் உள்ள மளிகை வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
Advertisement