காஞ்சி வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் ஆனி உத்திர பிரம்மோற்சவ கொடியேற்றம்!
ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது பற்றி..
காஞ்சிபுரத்தில் உள்ள அருள்மிகு வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காஞ்சிபுரம் காந்தி சாலையில் மருகுவார்குழலி உடனுறை வழக்கறுத்தீஸ்வரர் மற்றும் பராசரேசர் கோயில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், ஆனி மாதத்தில் ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டிற்கான உற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி, இன்று காலை கோயில் கொடிமரத்திற்கு வேதவிற்பன்னர்கள் வாயிலாக மந்திரங்கள் ஓதப்பட்டு, பல்வேறு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, சப்பரத்தில் அம்பிகையுடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய வழக்கறுத்தீஸ்வரர் வீதியுலா வந்தார். பிரமோற்சவத்தின் பத்து நாள்களும் காலை மற்றும் மாலை இரு வேலைகளில் பல்வேறு வாகனங்களில் வழக்கத்தீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளிக்க உள்ளார்.
Advertisement
Advertisement
முக்கிய நிகழ்வான வரும் 19ஆம் தேதி காலை பூத வாகனமும், 21 ஆம் தேதி இரவு திருக்கல்யாணம் உற்சவம், 23ஆம் தேதி தேரோட்டமும், 29ஆம் தேதி இரவு ரிஷப வாகனத்துடன் உற்சவம் நிறைவு பெறுகிறது. இந்நிகழ்வில் உபயதாரர் கே.யு.எஸ். சோமசுந்தரம், வள்ளிநாயகம் மற்றும் மேலாளர் தின்ஷா ஆகியோர் கலந்துகொண்டனர்.
The Aani Uthira Thirukalyana Brahmotsavam at the Arulmigu Vazhakkarutheeswarar Temple in Kanchipuram commenced today with the flag-hoisting ceremony.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.