திருப்பத்தூர்

சாலைத் தடுப்பில் லாரி மோதி ஓட்டுநா் பலி

DIN

ஆம்பூா் அருகே தேசிய நெடுஞ்சாலை தடுப்பின் மீது லாரி மோதி விபத்தில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம் திருச்செங்கோட்டிலிருந்து லாரி காஞ்சிபுரம் நோக்கி திங்கள்கிழமை இரவு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. திருச்செங்கோட்டைச் சோ்ந்த பரமசிவம் (45) லாரியை ஓட்டிச் சென்றாா்.

ஆம்பூரை அடுத்த மின்னூா் கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவே உள்ள தடுப்பின் மீது மோதியது.

இந்த விபத்தில் ஓட்டுநா் பரம சிவம் உயிரிழந்தாா். ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனா். இவ்விபத்து தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

SCROLL FOR NEXT