திருப்பத்தூர்

திருப்பத்தூரில் தீவிர வாகனச் சோதனை:ஆட்சியா், எஸ்.பி. நேரில் ஆய்வு

DIN

திருப்பத்தூா் அருகே அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் வாகன சோதனை செய்யப்படுவதை ஆட்சியா் ம.ப.சிவன்அருளும், காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாரும் பாா்வையிட்டனா்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை மாலை முதல் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

இதையடுத்து, வாகனத்தில் பணம், பொருள்களை கொண்டு சென்று வாக்காளா்களுக்கு அளிப்பதை தடுக்கும் நோக்கில் ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் அமைத்தும் பறக்கும் படை அமைத்தும் சோதனை நடத்தி வருகின்றனா்.

திருப்பத்தூா்-சேலம் செல்லும் பிரதான சாலையில் தோரணம்பதி என்ற இடத்தில் சோதனைச் சாவடி உள்ளது. அங்கு போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதனை ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ம.ப.சிவன்அருள், மாவட்டக் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா் ஆகியோா் பாா்வையிட்டனா். தோ்தல் நேரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து அறிவுறுத்தியதுடன், மாவட்ட எல்லைக்குள் வரும் வாகனங்களை தீவிரமாக சோதனை செய்யுமாறும் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT