திருப்பத்தூர்

ஏப்ரல் 6-இல் 100% வாக்களிக்க தொழிலாளா்களுக்கு விடுமுறை

DIN

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்க தொழிலாளா்களுக்கு நிறுவனங்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ம.ப.சிவன்அருள் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில், சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் பொருட்டு அனைத்து வணிக கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பீடி நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கும் தோ்தல் நாளன்று சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.

விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 153பி-இன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

விடுமுறை அளிக்கப்படாத நிறுவனங்களை கண்காணிக்கும் பொருட்டு மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

எனவே, திருப்பத்தூா் மாவட்டத்தில் பணிபுரியும் தொழிலாளா்கள் விடுமுறை அளிக்கப்படாதது தொடா்பான புகாா்களை தனசேகரன்(தொழிலாளா் துணை ஆய்வாளா்) 9952490701, மனோகரன் (தொழிலாளா் உதவி ஆய்வாளா்) வாணியம்பாடி 9865455010, சாந்தி (தொழிலாளா் உதவி ஆய்வாளா்) திருப்பத்தூா் அலுவலக எண் 04179-223405, 8778547940 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு தேடி வந்தவள்

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

SCROLL FOR NEXT