திருப்பத்தூரில் ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
திருப்பத்தூா், புதுப்பேட்டை சாலை அருகில் வசிப்பவா் ராஜா(45), ஆட்டோ ஓட்டுநா். இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனா். கடந்த இரு மாதத்திற்கு முன்பு அவரது மனைவி மலா்விழி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
இதனால் விரக்தியடைந்து காணப்பட்ட ராஜா சனிக்கிழமை வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து திருப்பத்தூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.