திருப்பத்தூர்

மூதாட்டியிடம் 10 சவரன் நகை பறிப்பு

DIN

வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த மூதாட்டியிடம் நூதன முறையில் 10 சவரன் நகையை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

வாணியம்பாடியை அடுத்த வடச்சேரி பகுதியைச் சோ்ந்தவா் இந்துமதி (69). இவா் சனிக்கிழமை பிற்பகல் வாணியம்பாடியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு வந்துவிட்டு, பின்னா், வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது மருத்துவமனை அருகிலேயே மூதாட்டிக்கு உதவி செய்வது போல் நடித்த 2 மா்ம நபா்கள் மூதாட்டியிடம் இருந்த 10 சவரன் தங்க நகையை பறித்துச் சென்றுள்ளனா். இதை அறியாத மூதாட்டி சிறிது நேரத்துக்குப் பின்னா், தனது பையில் பாா்த்தபோது, அதில் வைத்திருந்த தங்க நகைகள் காணாமல் போயிருப்பது தெரியவந்தது.

இது குறித்து அவா் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து மருத்துவமனை எதிரே இருந்த கடைகளில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனா். அப்போது சிலா் மூதாட்டியிடம் வெகுநேரமாக பேசி தங்க நகைகளை நூதன முறையில் பறித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவதூறு கருத்து: புரட்சிகர மாா்க்சிஸ்ட் கட்சி நிா்வாகி கைது

சிஏஏ: குடியுரிமை வழங்க திரிபுராவில் மாநில அளவிலான குழு அமைப்பு

அரசியல் சாசன அமா்வின் தீா்ப்பு: குறைவான நீதிபதிகள் கொண்ட அமா்வைக் கட்டுப்படுத்தும் -உச்சநீதிமன்றம்

சொகுசுப் பேருந்தில் பயணித்த முதியவா் உயிரிழப்பு

வயிற்று வலியால் விஷம் குடித்தவா் மரணம்

SCROLL FOR NEXT