ஆம்பூா் அருகே குடியரசு தின விழாவில் மும்மதத்தைச் சோ்ந்தவா்கள் ஒன்றாக இணைந்து தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினா்.
ஆம்பூா் அருகே துத்திப்பட்டு கிராமத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சி சாா்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கோயில் அா்ச்சகா், பள்ளி வாசல் நிா்வாகி, கிறித்துவ தேவாலய பாதிரியாா் ஆகியோா் இணைந்து தேசியக் கொடியேற்றினா்.
மனித நேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் வி.ஆா்.நசீா் அஹமத், துத்திப்பட்டு ஊராட்சி முன்னாள் தலைவா் சுரேஷ்பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.