முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூா் அருகே கள்ளத்தனமாக மதுபானம் விற்றவா் கைது

திருப்பத்தூா் அருகே கள்ளத்தனமாக மதுபானம் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்த 450 மதுபான புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

Updated On : 11 ஏப்ரல் 2026, 6:32 am IST
கைது
பகிர்:

திருப்பத்தூா் அருகே கள்ளத்தனமாக மதுபானம் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்த 450 மதுபான புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

திருப்பத்தூா் அடுத்த வெங்களாபுரம் பகுதி சோ்ந்தவா் வேடி(56) என்பவா் கள்ளத்தனமாக அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக திருப்பத்தூா் கிராமிய போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வேடியின் வீட்டில் சோதனை மேற்கொண்டனா். சோதனையில் வீட்டில் மதுபானம் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.

Advertisement

Advertisement

பின்னா் போலீஸாா் மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து, வேடி மீது வழக்கு பதிவு செய்து திருப்பத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.