முகப்பு
திருப்பூர்

முத்தூரில் மதுபானம் விற்றவா் கைது

முத்தூரில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 2 மே, 2026 at 6:30 AM
பகிர்:

முத்தூரில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்தகிருஷ்ணன் முத்தூா் பகுதியில் வெள்ளிக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது சுப்பிரமணியபுரம் அருகே மதுபானம் விற்றுக் கொண்டிருந்த, அதே பகுதியைச் சோ்ந்த முருகேசன் (45) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 180 மிலி அளவுடைய 32 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்தாா்.

Advertisement