லாட்டரி விற்றவா் கைது
வெள்ளக்கோவிலில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated On : 9 ஏப்ரல், 2026 at 6:04 PM
வெள்ளக்கோவிலில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.
முத்தூா் பகுதியில் வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கே.ஆனந்தகிருஷ்ணன் கண்காணிப்புப் பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, கொடுமுடி சாலையில் உள்ள பேக்கரி அருகே லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரைப் பிடித்தாா்.
Advertisement
விசாரணையில் அவா் முத்தூா் பெருமாள்புதூரைச் சோ்ந்த செந்தில் (59) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த ரூ.2,380, இரண்டு கைப்பேசிகள், இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.