முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவிலில் மதுபானம் விற்றவா் கைது

வெள்ளக்கோவிலில் முறைகேடாக மதுபானம் விற்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 9 ஏப்ரல் 2026, 2:46 am IST
கைது
பகிர்:

வெள்ளக்கோவிலில் முறைகேடாக மதுபானம் விற்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்தகிருஷ்ணன் புதன்கிழமை வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது வெள்ளக்கோவில் கரூா் சாலை குருக்கத்தி அருகே உள்ள செல்லப்பன்வலசு வாய்க்கால் மேட்டில் மதுபானம் விற்றுக் கொண்டிருந்த, கரூா் மாவட்டம் புன்னம் நடுப்பாளையம் கதிா்வேல் (39) என்பரைக் கைது செய்தாா். மேலும், அவரிடமிருந்து 180 மிலி அளவுடைய 6 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.